Saturday, July 25, 2015

Bible Quiz

1. மண்ணுலகில் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். ஏன்?
- பூச்சியும் துருவும் அழித்து விடும்.  திருடரும் திருடுவர் (6:19)
2. இயேசு திருத்தூதர்களை அனுப்பும்போது எதைப்பற்றி பறைசாற்றச் சொன்னார்?
- “விண்ணரசு நெருங்கி விட்டது” எனப் பறைசாற்றுங்கள் (10:7)
3. திருந்த மறுத்த நகர்கள் யாவை?
- கொராசின் நகர், பெத்சாய்தா, கப்பர்நாகும் (11:21,23)
4. நீங்கள் என்னை யார் எனச் சொல்கிறீர்கள்? என்று கேட்ட இயேசுவிற்கு பேதுரு கூறிய மறுமொழி யாது?
- “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார் (16:16)
5. மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் இறுதி வார்த்தை எது?
- “இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (28:20)
6. எலியா யாரிடம் அனுப்பப்பட்டார்?
சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த கைம் பெண்ணிடம் அனுப்பப்பட்டார் (4:26)
7. இயேசுவின் பெயரால் பேய் ஓட்டுவதை தடுத்தோம் என்று கூறியவர் யார்?
- யோவான் (9:49)

விவிலிய விழுமிய சிலுவைப்பாதை